2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தலைமையில் நேற்று  செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலார் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும்  இதன்போது ஆரயப்பட்டன.

அத்துடன் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் காணி, வீடு, மின்சாரம், குடிநீர், வீதி, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும்  இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும்  அமைப்புக்களின் பிரதிநிதிகள் ரிசாட் பதியுதீனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் உடனடியாக நிவர்த்தி செய்யக்கூடிய பிரச்சினைகளை உரியவர்களிடம் பேசி தீர்வுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர், ஏனையவற்றை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், சிவசக்தி ஆனந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X