2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர்ப் பகுதியில் 1 கிராமும் 400 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.

அத்துடன், மீண்டுமொருமுறை இவ்வாறான குற்றம் இழைத்தால், அதிகபட்ச தண்டனை மற்றும் தண்டம் என்பன அறவிடப்படும் எனவும் நீதவான் எச்சரிக்கை செய்தார்.

மேற்படி நபர், கஞ்சாவுடன் ஞாயிற்றுக்கிழமை (17) கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, திங்கட்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X