2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மடு திருத்தலத்தில் பாப்பரசர்

Thipaan   / 2015 ஜனவரி 14 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இலங்கை வந்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் இன்று(14) புதன்கிழமை மாலை 3.15 மணியளவில் விசேட வானூர்தி மூலம் மடு திருத்தலத்தை வந்தடைந்தார்.

இதன் போது சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாப்பரசரின் ஆசியை பெற வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதன் போது காணாமல் போனவர்களது உறவினர்கள், யுத்தத்தினால் பாதீக்கப்பட்டவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களும் பாப்பரசரின் ஆசி பெற மடு திருத்தலத்துக்கு வருகை தந்து காலை 11 மணி முதல் மக்கள் காத்திருந்தனர்.

மாலை 3.15 மணியளவில் விசேட வானூர்தி மூலம் மடு திருத்தலத்தை வந்தடைந்த பாப்பரசர், அங்கிருந்து மடு மாதா திருத்தலத்துக்கு வாகன பவனியாக அழைத்து வரப்பட்டார். இதன் போது அங்கு நின்ற மக்களுக்கு ஆசி வழங்கினார்.
தொடர்ந்து பாப்பரசர் தலைமையில் மடு மாதா திருத்தலத்தில் விசேட திருப்பலி பூஸை ஒப்புக் கொடுக்கப்பட்டு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

பாப்பரசரை தரிசிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .