Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2015 மே 26 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி முட்கொம்பன் காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பாலை மரங்களை வெட்டிய 4 பேருக்கு தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், செவ்வாய்க்கிழமை (26) தீர்ப்பளித்தார்.
குறித்த நால்வரும், திங்கட்கிழமை (25) மரங்களை வெட்டிக்கொண்டு இருக்கும் போது, அங்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து சுமார் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரங்களை கைப்பற்றினர்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025