Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 26 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில்; ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார், கரடிக்குழியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான அபூசாலிபு பிர்தௌஸ் (வயது 44) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாடியில் தங்கியிருந்து புதுமாத்தளன் கடலில் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்ற இவர், தனது நண்பர்களுடன் சங்கு பிடிப்பதற்காக நேற்று திங்கட்கிழமை இரவு கடலுக்கு சென்றுள்ளார். இவ்வாறு கடலுக்குள் சென்ற இவர் கடலில் காணாமல்; போனார். இதனை அடுத்து கடற்படையினரின் உதவியுடன் இவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
4 hours ago