2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முசலி பிரதேச செயலகத்தின் சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஜூன் 01 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று திங்கடக்கிழமை (01) காலை 9 மணியளவில் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் முசலி பிரதேசத்துக்கான சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு நிகழ்வை வைபக ரீதியாக ஆரம்பித்து வைத்தார். 

குறித்த நிகழ்வு, மே 31ஆம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை போதை தொடர்பான எதிர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறும்.

முசலி பிரதேச வாழ்வின் பிரதேச உத்தியோகஸ்தர் எம்.பிர்தொஸ், வங்கி முகாமையாளர் பீரிஸ் சமுக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நதிர், அஸ்லிப் மற்றும் பூநொச்சிக்குளம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவு திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வாஜத் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .