2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அதிசொகுசு வான் விபத்து: ஐவர் படுகாயம்

Princiya Dixci   / 2015 ஜூன் 08 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வன்னி ரொமேஸ் மதுசங்க

வவுனியா, மடுகந்த சந்தியில் அதி சொகுசு வான் வீதியைவிட்டு விலகி, மின் கம்பத்துடன் மோதி, 50 மீற்றர் தூரத்துக்குப் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மடுகந்த பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

அதிகூடிய வேகத்தில் வான் பயணித்துள்ளது. மதுபோதையில் இருந்த சாரதியால் அந்த வானை கட்டுப்படுத்த முடியாது போனதையடுத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என மடுகந்த பொலிஸார் தெரிவித்தனர். 

காயங்களுக்குள்ளான ஐவரும் மடுகந்த கிராமவாசிகளினால் மீட்கப்பட்டு, வவுனியா பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

விபத்துக்குள்ளான அதி சொகுசு வான் கடும் சேதமடைந்துள்ளது என்றும் வானுக்குள் இருந்து மதுபான போத்தல்கள் மற்றும் நொருக்குத் தீனிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மடுகந்த பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுகந்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X