Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 08 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மூன்றுமுறிப்பு கிராமத்தில் வடமாகாண போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அமைச்சால் 1.4 மில்லியன் ரூபாய் செலவில் அரிசி ஆலையொன்று அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்;டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் மூன்றுமுறிப்பு கிராமத்தில் இப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இந்த அரிசி ஆலை அமைக்கப்பட்டு வருகின்றது.
நவீன முறையில் அமைக்கப்படவுள்ள இந்த அரிசி ஆலைக்கான ஆரம்பகட்ட வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அரிசி ஆலை அமைப்பதன் மூலம் மூன்று முறிப்பு, இளமருதன்குளம் பனங்காமம், கொம்புவைத்தகுளம் ஆகிய பகுதிகளையும் வவுனியா வடக்கு, நவ்வி குஞ்சுக்குளம், நவ்வி, பாலமோட்டை, மடத்து விளாங்குளம் ஆகிய பகுதிகளையும் சேர்ந்த மக்கள் நன்மையடைவார்கள் என அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago