2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பழைய ஊரியான் கிராம வீதி புனரமைக்கப்படாமையால் 60 குடும்பங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2015 ஜூலை 23 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள, பழைய ஊரியான் கிராமத்துக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் இவ்வீதியை தினமும் பயன்படுத்தும் அறுபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்கட்டு - பழைய கண்டி வீதியிலுள்ள பழைய ஊரியான் கிராமத்துக்கான பிரதான வீதி, இன்றுவரை புனரமைக்கப்படாத நிலையில் பாரிய குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இதனால், இவ்வீதியை தினமும் பயன்படுத்தும் இக்கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வீதியின் இரு பக்கமும் வயல்கள் காணப்படுவதால் பயிர்ச் செய்கை காலங்களிலும் பருவமழை காலங்களிலும் வெள்ளநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.

பரந்தன் - முல்லைத்தீவு ஏ - 35 வீதியின் முரசுமோட்டைச் சந்தியில் இருந்து செல்லும் 6 கிலோமீற்றர் நீளமான குறித்த வீதியின் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரையான பகுதி மாத்திரம் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு ஏனைய பகுதி எந்த புனரமைப்புக்களுமின்றி காணப்படுகின்றது. எனவே, இந்த வீதியை புனரமைத்து தருமாறு இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .