2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

67 எலும்புக்கூடுகள் மீட்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து இன்று (18) மேலும் 3 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இவற்றுடன் சேர்த்து மொத்த மனித எலும்புக் கூடுகள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 25 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை மாந்தை மனித புதைகுழி மீண்டும் தோண்டப்பட்டது.

அனுராதபுரம் சட்ட வைததிய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 மனித எலும்புக்கூடுகள் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு பொதிசெய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொதுவைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

குறித்த புதைகுழியின் அகழ்வுப்பணிகள் மீண்டும் நாளை 26 ஆவது தடவையாக மன்னார் நீதவான் முன்னிலையில் காலை 8.30 மணிக்கு இடம்பெறும்.

இதேவேளை நேற்றைய அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட தடையப்பொருளினை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் புலனாய்வுப்பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .