2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அநியாயங்கள் என்றுமே நியாயமாகாது

Princiya Dixci   / 2016 ஜூன் 14 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் பழங்காலத்துக் கதைகளிலிருந்து, இந்தக் காலத்துக் கதைகள் வரை, கதாநாயகர்களும் வில்லன்களும் வந்து கதைகளைச் சுவாரஸ்யப்படுத்துவர்.

ஆனால், மக்கள், வில்லன்களின் அடாவடித் தனங்களை வெறுப்பார்கள். வில்லன் என்றாலே, பொல்லாத கெட்டவன் என்று நோக்கப்பட்டது.

ஆனால் இன்று மக்களில் சிலர், நிஜமான வில்லன்களையே கதாநாயகர்களாக எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். துணிச்சலுடன், மக்கள் விரோதச் செயல்களைச் செய்பவர்களையே வீர புருஷனாக ஏற்றுக்கொள்வது காலத்தின் கொடுமைதான்.

உலகின் பாவங்கள் அதிகரித்து, தர்மத்துக்குச் சோதனைகள் வந்தால், இறைவனே நேரில் வருவார் என ஆன்மிகவாதிகள் சொல்லி வருகின்றனர். கடவுளின் வருகையினை மக்களும் எதிர்பார்க்கின்றனர். அநியாயங்கள் என்றுமே நியாயமாகாது.

உண்மை சேய்மையில் இல்லை. பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளது.

வாழ்வியல் தரிசனம் 14/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .