2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

பாரமின்றி வாழ பொய்யுரையாதீர்...

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கையில், நான் ஓரிரு பொய்கள் தான் சொல்லியிருப்பேன். அது என்ன பெரிய தப்பாகும் எனச் சிலர் சொல்வதுண்டு.

என்றுமே உண்மை பேசுபவர்கள் கூட, தெரியாத் தனமாகச் சொன்ன பொய்யொன்றினால், அவஸ்தைப்பட்டதுண்டு.

சந்தர்ப்ப வசத்தால், பொய்பேச நிர்ப்பந்திக்கப்பட்டால், அதன் எதிர்விளைவுகளைச் சிந்திக்கவும். சொல்லப்படும் பொய்யினால், அதனால் உங்களுக்கோ அன்றி சமூகத்துக்கோ, தனிமனிதனுக்கோ நல்லதுதானா, என்பதை ஒருதடைவைக்கு நூறு தடவை சிந்தியுங்கள்.

தற்காலிக நன்மைக்காக நிரந்தரமான சந்தோஷங்களைச் சொல்லும் பொய்யினால், இழப்பது மஹாதவறு.

மனதில் பாரமின்றி வாழ இலகுவான வழி, பொய்யுரையாமையாகும். பொய் மனிதனை மெய்வருந்தச் செய்யும்.

வாழ்வியல் தரிசனம் 28/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X