2025 ஜூன் 07, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 01/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 01 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொழுது போக்குதல் என்பது பொழுதுகளைப் போக்குதல் அல்லது அவைகளை வெறுமனே கரைத்தல் அல்ல.

அவை, பொழுதுகளை நல்லபடி அமைத்தலேயாகும். எவர் மனதையும் காயப்படுத்தாது, தனக்கு ஊறு விளைவிக்காது பயன் தரும்படி நயம்பட உருவாக்குவதே ஆகும்.

சதா உழைத்தவர்களே ஓய்வு எடுக்க உரிமையுள்ளவராவர். எதுவுமே செய்யாதவர்கள் அதுபற்றிப் பேசவும் முடியாது.

உடலை, மனசை ஆசுவாசப்படுத்தலே ஓய்வு எடுத்தலாகும். இதனால் மீண்டும் உழைக்கத் தெம்பு ஏற்படும்.

கழிக்கின்ற பொழுதுகள் எம்மை புதிதாக உருவாக்கிய படியே செல்லவேண்டும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .