Princiya Dixci / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நான் என்ன செய்தேன், அதனைச் சிறப்புறச் செய்தேனா என உங்களை நீங்களே கேட்பீர்களாக.
முக்கியமாக, அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அன்றாடம் தாங்கள் செய்த கருமங்களைத் தங்கள் குறிப்பேட்டில் பதிவு செய்தல் வேண்டும்.
மனசாட்சிப்படி இயங்குபவன், பிறர் வெறுப்புக்கு ஆளாகமாட்டான்.
எக்கருமத்தையும் குறையுடன் செய்யாமல் இருக்க, மறந்துபோகாமல், செய்யும் வேலையையும் இனித் தொடரும் கருமத்தையும் சிரமம் பார்க்காது ஞாபகக்குறிப்பில் எழுதிவைத்திருக்கவும்.
ஒவ்வொருவர் சேவையையும் இந்த உலகம் எதிர்பார்க்கின்றது. சந்தர்ப்பம் பார்த்து கடமையில் இருக்காது நழுவுதல் அநாகரிகமானதும் நீதிக்குப் புறம்பானதுமாகும். சேவை செய்தலே மகா ஆனந்தம்‚
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .