Princiya Dixci / 2016 மார்ச் 09 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்மைப்போக்குடையவர்கள் கூட மென்மையான குணங்களைக் கொண்டவர்களாக மாறுவதுமுண்டு.
உள்ளத்தில் கனிவுடனும் வெளியே முரட்டுத்தன்மையுடனும் உள்ள நல்லவர்களும் இருக்கின்றார்கள்.
ஆனால், புறத்தே மென்மையாகக் கனிவுடன் பேசிப்பழகும் சிலர், தங்களின் இயல்பான கொடூர குணங்களைச் சமூகத்தின் மேல் பாய்ச்சுவதானது, முன்னைய நடிப்பாற்றலைப் பறை சாற்றுவது போல் அமைந்துவிடுகின்றது.
முகமூடியைத் தொடர்ந்து அணிந்து கொள்ள முடியாது. வெளிப்படையாக இயங்குபவர்களிடம் அச்சம் ஏற்படாது.
நெஞ்சில் கள்ளம் உள்ளவரிடம் இரக்கம் சுரக்காது. இவர்களுக்கு தூக்கமும் கிடையாது. துக்கங்களையே என்றும் சுமக்க வேண்டி வரும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026