2025 ஜூன் 07, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 05/05/2016

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லா மனிதர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என நம்புவோமாக.

இதனை உணராமல், பலர், மற்றவர்களைக் கேலி பேசுதல் அறியாமையேயாகும்.

இன்றைய வாழ்க்கை ஒருவிதமாகவும் எதிர்காலம் மாற்றத்துக்குள்ளாவதும் உலக இயற்கையுமாகும். தற்போதைய வாழ்க்கையில் ஒருவன் நல்ல நிலையில் இல்லாமல் இருந்தாலும் கூட, அவனது எதிர்காலத்தில் செழிப்பானவனாக மாறிவிட முடியும்.

எனவே, எவரினதும் வாழ்க்கையின் முடிவு வரை எம்மால் அவர்கள் பற்றிய முழுமையான சரித்திர மாற்றத்தை, திறனை முடிவு செய்ய முடியாது.

சகலரினது வாழ்க்கையின் இறுதிப் பெறுபேறுகளை முடிவு செய்ய நாங்கள் யார், எல்லாவற்றையும் வல்ல இறைவனே அறிவான்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .