2025 ஜூன் 07, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 06/05/2016

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் நாணம், பார்க்க அழகாக இருக்கும். எந்த வயதில் உள்ள மகளிருக்கும் நாணம் பொதுவானதும் பார்ப்பதற்கு எழிலாகவும் இருக்கும்.

ஆயினும், மகளிர் வீரத்தில் ஆண்களுக்கு நிகராக இருந்தேயாக வேண்டும். தற்காலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பார்க்கும்போது பெண்கள் வீரம் மிக்கோராகவும் துணிச்சலில் எவர்க்கும் சளைத்தவர் அல்லர் எனவும் வாழ்ந்து காட்ட வேண்டும்.

பெண்களின் இயல்பான மென்மையையும் நாணத்தையும் எங்ஙனம் இரசிக்கின்றோமோ, அவ்வண்ணமே அவர்களுக்கு மிகவும் அத்தியாவசிய வீரத்தையூட்டுதல் அவர்தம் குடும்பத்துக்கும் சமூகத்துக்குமான கடமையுமாகும்.

மென்மையான பெண்ணுக்குள்ளும் அநீதியை ஒழிக்கும் தன்மையும் உண்டு என்பதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .