2025 ஜூன் 07, சனிக்கிழமை

'எங்கிருந்து வந்தான் இவன்?, எப்படிச் சினேகிதனானான்?'

Princiya Dixci   / 2016 ஜூன் 08 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல் சந்திப்புக்களிலேயே உருவான சந்திப்பு, இறுதிக் காலம் வரையும் நீடிப்பதுண்டு.

முதன் முறையாக, ஒருவரையொருவர் கண்டதும், இனம்புரியாத உணர்வுடன் ஸ்பரிசிக்கப்பட்டு, காதல் முக்கித்துப் பூவாகிப் பரிணமித்த காதலினால், அவர்கள் திருமணம் செய்து வாழ்க்கையில் பற்பல பேறுகளைப் பெற்ற தம்பதிகள் ஏராளம்.

காதல் தம்பதியினர் மட்டுமல்ல. நல்ல நண்பர்கள், தொடர்புகள் கூட, எதிர்பாராத முகத் தரிணங்களூடாகக் கிட்டுவதுண்டு.

எங்கிருந்து வந்தான் இவன், எப்படிச் சினேகிதனானான் என வியப்புடன் புளங்காகிதமடையும் நண்பர்களின் பேச்சை நாம் கேட்டதுமுண்டு.

தொட்டுவிட்ட நல்ல நட்பைக் கெட்டியாகப் பிடித்திருப்பதே சாலச்சிறந்தது. எங்கள் சந்திப்பின் வழியாக, எதிர்பாராமல் கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷமானது, தூய நட்பு மனதோடு, வியாபித்த மா விருட்சமாகும்.

வாழ்வியல் தரிசனம் 08/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .