2024 ஜூலை 27, சனிக்கிழமை

கோமாவில் போராடிய கணவரை அன்பினால் குணப்படுத்திய மனைவி

Freelancer   / 2024 மே 15 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மனைவியின் ஈடு இணையற்ற அன்பால், கடந்த 10 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர் மீண்டு வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கணவர் கடந்த 2014ஆம் ஆண்டு மாரடைப்பால் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.

ஆனால், என்றாவது ஒரு நாள் தனது கணவர் இந்த நிலையில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை இழக்காமல், அவரது தேவைகளை நிறைவேற்றி தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார் அந்த அன்பான மனைவி.

இது பற்றி அவர் கூறுகையில், 'நான் மிகவும் சோர்வாக இருந்தாலும், ஒரு நாள் நாங்கள் மீண்டும் குடும்பமாக இணைந்தால், எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .