A.P.Mathan / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடர் தென் ஆபிரிக்காவில் நிறைவுக்கு வந்துள்ளது. மிகுந்த பரபரப்பு, விறு விறுப்பு இந்த தொடருக்கு இருந்தது என்று சொல்வதற்கில்லை. உலக 20 - 20 முடிவடைந்து சிறிது நாட்களுக்குள்ளேயே இந்த தொடர் ஆரம்பித்தமை ஒரு முக்கிய காரணம். சொந்த நாடு அணிகளின் வெற்றி தோல்விகள், சந்தோசங்கள், வெறுப்புக்கள் என மன ரீதியான விடயங்கள் அடங்க முன்னரே இன்னும் ஒரு தொடர். யாருக்கு ஆதரவு தருவது என்ற குழப்ப நிலை. எதிர்த்த வீரர்கள் சார்பான அணியிலும், ஆதரவு தெரிவித்த வீரர் எதிர்த்தும் விளையாட உடனடியாக மனதை மாற்றிக்கொள்ள மனம் இடம் கொடுக்குமா என்பதும் கேள்வியே. இவற்றை தாண்டி ஆரம்ப கட்டுரையில் குறிப்பிட்டது போலவே 20 - 20 போட்டிகளை பார்த்து ரசிகர்கள் களைப்படைந்துள்ளனர் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையே. .jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .