2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் மீனவர்கள்

Janu   / 2024 மார்ச் 03 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ( 03)  கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்திய இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக எல்லை மீறி வந்து இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள்  இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு சென்று கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

இலங்கை மீனவர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதால், மீனவர்களது பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மீனவர்களுக்கான அனுமதி சீட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பு. கஜிந்தன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X