Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 14 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழரசுக்கட்சியின் மறைந்த தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் நினைவு தினம் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) அன்று நடைபெற்றது .
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இரா.சம்மந்தனின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றியிருந்தார்.
எங்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது அஞ்சல் ஓட்டம் போன்றது. தந்தை செல்வா முதல் பிரபாகரன் வரை எட்டு தசாப்தமாக தொடர்கிறது.
விமர்சனங்கள் உண்டு அவற்றை எல்லாம் தாண்டி தேசிய விடுதலையை கொண்டு சென்ற பங்கு சம்பந்தனுக்கு மிகப்பெரியது.
இறுதியாக சாள்ஸ் நிர்மலநாதனும் நானும் இறுதியாக சந்திக்கும் போது அவரின் அனுமதியுடன் குரல் பதிவு செய்தேன் என் மீதான நடவடிக்கை இறுகுகின்ற போது வெளியிடுவேன் நினைவாற்றல் நிறைந்தவர் விடயங்களை கேட்டு பதிலளிக்க கூடியவர் விக்கினேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராக கொண்டு வந்த போது மகிந்தாவை பார்த்து சம்பந்தன் ஐயா கேட்டார்.
பிள்ளையாரைப் பார்த்து எப்படி பொலிஸ் அதிகாரம் தரமுடியும் என கேட்டிருந்தீர்கள் இவருக்கு என்ன பதில் சொல்லப்போறீர்கள் அதிகாரத்தை வழங்குங்கள் என கூறினார்.
பசில் கோத்தபாய பெயர் சொல்லியே பேசக்கூடியவர் கஜேந்திரகுமார் பேரன் போன்ற விண்ணர் போற வழி தெரியவில்லை என்று சொன்னார்.
யார் கதைத்தாலும் கேட்கக்கூடிய நியாயத்தை வழங்க கூடியவர் சிலர் கேளிக்கையாக நோக்கலாம் தீபாவளிக்கு தீர்வு பொங்கலுக்கு தீர்வு அந்த விடயங்கள் எதிரிக்கு சவால் விடும் அது ஒரு தலைவரின் பங்கு நீலம் திருச்செல்வன் சம்பந்தன் சந்திரிக்காவுடன் நெருக்கமானவர்கள் இடைக்கால வரைபை மைத்திரி கொண்டு வரும்போது சந்திரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுமாறு கூறிய நிலையில் எங்களை நம்ப வேண்டும் என தெரிவித்தவர்
கட்சியில் எல்லோரையும் அரவணைத்து சென்றவர் யுத்தத்திற்கு பின் அவரின் தலைமைத்துவம் சிறப்பாக இருந்தது சிலர் தவறான வழிநடத்தல் களை மேற்கொண்டனர்.அவரை வைத்து என்று அவர் உரையாற்றினார்.
7 hours ago
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jul 2025