2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: தந்தைக்கு விளக்கமறியல்

Mayu   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

தன்னுடைய ஒன்பதே வயதான மகளை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அச்சிறுமியின் தந்தை, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், முல்லைத்தீவு, மாவட்டம் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.

தன்னை, தந்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டாரென, அச்சிறுமி தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் டிசெம்பர் 4ஆம் திகதியன்று  முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய, அப்பெண்ணின் கணவன், அன்றையதினமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். 
   
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட  தந்தை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ​செவ்வாய்க்கிழமை (05) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை  எதிர்வரும்  19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X