Janu / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர் .
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் தலைமையில் புதன்கிழமை (07) அன்று இரண்டு டிப்பர் வாகனங்களும் வியாழக்கிழமை (08) அன்று மூன்று டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வியாழக்கிழமை (08) அன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார் .

12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Mar 2026
12 Mar 2026