2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தந்தை செல்வாவின் சிலை திறப்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 01 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகரில்அமைந்திருந்த தந்தைசெல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (1) அன்று காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள்,மன்னார் நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனிடேவிட்சன்,நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மத தலைவர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மன்னார் நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனிடேவிட்சன் ஆகியோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

மன்னார் நகரமத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன்அமைக்கப்பட்டிருந்த  தந்தை செல்வாவின் சிலைகடந்த புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.                                        

தந்தை செல்வாவின் சிலைஉடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள்  மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தநிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தந்தை செல்வாவின் உருவச்சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட  நிலையில் அவரது சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது. 

சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சம்பவத்துடன்  தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .