2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 பேர் கைது

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில், அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்லாறு, புளியப்பொக்கணை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 4 டிப்பர் வாகனங்கள் புதன்கிழமை (08)  கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X