Mayu / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மீசாலை , இராமவில் பகுதியில் நேற்றைய தினம் (13) இரவு கடையொன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தினால் பெறுதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
குறித்த தீ விபத்தினால் அப்பகுதிக்கான மின் விநியோகமும் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீ விபத்தானது மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்தினை அடுத்து , தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்படத்தக்கது.
எம். றொசாந்த்


44 minute ago
45 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
45 minute ago
59 minute ago
1 hours ago