2025 மே 21, புதன்கிழமை

முல்லைத்தீவில் வெடிகொழுத்திய மக்கள்

Freelancer   / 2022 ஜூலை 10 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஜனாதிபதி மாளிகைக்கு திரண்ட மக்களின் போராட்ட வெற்றிக்கு முல்லைத்தீவு மக்கள் ஆதரவு தெரிவித்து வெடி கொழுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையினை நேற்று (09) முற்றுகையிட்ட மக்கள்  தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் மக்கள் வெடிகொழுத்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று நகர்பகுதியிலும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலும் மக்கள் வெடிகொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர்,
இலங்கையில் அதிகப்படியான 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி அதே மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X