Janu / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு ரயில் மார்க்கத்தின் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகள் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு கோட்டையில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
செவ்வாய்க்கிழமை (29) காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.
மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதர்ஷன் வினோத்
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025