Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிப்பிமடுப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று நேற்று முன்தினம் (18) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆயித்தியமலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலப்பகுதியில் இக்கைக்குண்டு கைவிடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .