Editorial / 2020 நவம்பர் 18 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி போகம்பர சிறைச்சாலையை நாங்கள் மறுசீரமைத்தோம், அங்குச் சென்று நாளொன்றை கழிக்கும் வகையிலான ஏற்பாடுகளை முன்னெடுத்திருத்தோம் எனத் தெரிவித்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கண்டி, போகம்பர சிறைச்சாலை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. முதலில் 100 பேர் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 800 பேர் இருக்கின்றனர். கைதிகள் தப்பியோடுவதற்கு முயன்ற போது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. அதில் கைதியொருவர் மரணித்துள்ளார் மற்றுமொருவர் தப்பியோடியுள்ளார்” என்றார்.
போகம்பர ஒரு நேரக்குண்டு, எப்போது வெடிக்கும் என்றே தெரியாது. ஆகையால், அரசாங்கம் கலந்துரையாடி, போகம்பர பழைய சிறைச்சாலையிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையத்தை அகற்றி, பரந்தளவில் இடமிருக்கும் இடங்களுக்கு மாற்றவும் எனக் கேட்டுக்கொண்டார்.
4 minute ago
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
1 hours ago