2026 ஜனவரி 24, சனிக்கிழமை

எலியந்த வைட்டின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Editorial   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவரான எலியந்த வைட்டின் இறுதிச் சடங்கு பொரளை கனத்தை மயானத்தில் இன்று (23) நடைபெற்றது.

  கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பல வாரங்களாக சிகிச்சைப்பெற்றுவந்த அவர், கொரோனா வைரஸ் தொற்றால், நேற்று  (22) மரணமடைந்தார்.

அதிவிசேட முக்கிய பிரமுகர்களிடத்தில் அவர் பிரபலமானவர் மற்றும் அவரது சிகிச்சையில் பெரும்பாலும் மூலிகைகளைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொண்டுள்ளனர். ( படம் பிரதீப் தில்ருக்ஷண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X