Freelancer / 2023 மே 30 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்கள் உட்பட அனைவரினதும் கண்களில் நேரடியான சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும் தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் டொக்டர் பிரசாத் கொலம்பகே செவ்வாய்க்கிழமை (30) அறிவுறுத்தியுள்ளார்.
நேரடி சூரிய ஒளி அதிகமாக பார்க்கும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும் என்றும் கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்ணாடிகள் அணிவதன் மூலம் சில கண் பிரச்சினைகள் வராதவாறு தவிர்க்கலாம் என்று குறிப்பிட்ட அவர், நேரடி சூரிய ஒளியால் வாந்தி, தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் வைத்தியர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறுவது சிறந்தது எனவும் நீரிழப்பைத் தடுக்க தண்ணீர் மற்றும் திரவங்களை அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.
27 minute ago
32 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
56 minute ago
1 hours ago