J.A. George / 2021 ஜூன் 21 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐவரடங்கிய அமைச்சரவை உப-குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அண்மையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் யோசனை முன்வைத்திருந்தார்.
எனினும், அந்த யோசனை நிராகரிக்கப்பட்டதோடு இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக குறித்த அமைச்சரவை உப-குழு நியமிக்கப்பட்டது.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் குழுவில் அங்கம் வகித்திருந்தனர்.
7 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
24 Jan 2026