R.Maheshwary / 2021 ஜூன் 18 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜி.கபில
போலி தகவல்களை சமர்ப்பித்து, கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதியொருவர், இன்று (18) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், முல்லைத்தீவு- மாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) அதிகாலை 3.45 மணியளவில் கட்டார் நோக்கி புறப்படவிருந்த கியூ.ஆர்.669 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு இந்த யுவதி விமானநிலையத்துக்கு வருகைத் தந்துள்ளார்.
இதன்போது, அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த யுவதியால் விமான நிலைய அதிகாரிகளுக்கு சமர்ப்பித்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையும் போலியானதென கண்டறியப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட யுவதியிடம் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
10 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
1 hours ago