Freelancer / 2022 ஜனவரி 25 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - கெங்கல்ல தேசிய பாடசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஐந்து மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த பாடசாலையின் தரம் 08 மற்றும் 10 ஆம் வகுப்புகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரம் 08 மற்றும் 10 ஆம் வகுப்புகள் மூடப்பட்டு அதன் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய குண்டசாலையில் பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தினால் ஆன்டிஜென் மற்றும் PCR பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026