J.A. George / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை - வெலிகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (30) இரவு ஏற்பட்ட இந்த தீவிபத்தின் போது, அறையின் மேற்கூரை சரிந்து, அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது விழுந்துள்ளது.
இந்த தீ விபத்தின் போது அருகில் உள்ள அறையில் இருந்து சிறுமியின் பாட்டி மற்றும் 13 வயது சகோதரி ஆகியோர் அங்கிருந்து வெளியில் சென்றதால் உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .