2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

'இரத்தின தீபம்' விருது விழாவின் ஸ்தாபகருக்கு பாராட்டு விழா

Gavitha   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மலையக கலை கலாசார சங்கத்தினால் கடந்த 20 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் 'இரத்தின தீபம்' விருது விழாவின் ஸ்தாபகரும் சினிமா, நாடகக் கலைஞருமான ராஜா ஜென்கின்ஸ்சின் கலையுலக சேவையைப் பாராட்டும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை (22) கண்டியில் நடைபெற்றது.

கண்டி, மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் ஒழுங்கு செய்த இப்பாராட்டு விழாவில், மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஆர். ராஜாராம் பிரதம அதிதியாகவும் கிரிக்கெட் வீரர் முரளிதரனின் தந்தை எஸ். முத்தையாவும் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

ராஜா ஜென்கின்ஸ்சுக்கு ஊடகவியலாளர்கள் சார்பாக சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் பென்னாடை போர்த்தினார். அதிதிகள் பொற்கிழி வழங்கி கௌரவித்ததுடன், அந்தனி ஜீவா மற்றும் எஸ். சிவக்குமார் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .