R.Maheshwary / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை- எல்கடுவ பிரதேசத்திலுள்ள காடொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த காட்டுக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற ஒருவர், சடலங்களை கண்டு, மாத்தளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, குறித்த இருவரும் சில தினங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்கடுவ- ஹுணுகல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒரு பிள்ளையின் தந்தையும் எல்கடுவ தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில், மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago