Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
மொனராகலை- ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்டெமண்டிய பிரதேசத்தில் பாட்டியின் அரவணைப்பில் இருந்த இரண்டு பிள்ளைகளை கொடுமைப்படுத்திய, அப்பிள்ளைகளின் மாமா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
13 மற்றும் 9 வயது சிறுமிகள் இருவரையும் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில், அப்பிள்ளைகளின் தாயின் உடன்பிறந்த சகோதரனான 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமிகளின் தந்தை, தாயையும் பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில், தாய் கொழும்பில் பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், சிறுமிகள் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையிலேயே குறித்த நபர், சிறுமிகளை கடுமையாக தாக்கி, மிளகாய்த் தூளை கரைத்து முகத்தில் ஊற்றியுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago