Princiya Dixci / 2022 ஜூலை 05 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்சசெல்வன்
எரிபொருள் இன்மையால் கிளிநொச்சி மீனவர்கள் பலர் பண்டைய காலத்து முறைப்படி, பாய்மர படகுத் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்னும், இதன்மூலம் சொற்ப அளவு வருமானத்தை மாத்திரமே பெற முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது படகுகளில் பெட்சீட், சாறி மற்றும் பலமான துணியைக் கட்டி, கரையோர கடற்றொழிலில் ஈடுப்பட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள், தமது கடலில் தம் கண்முன்னே இந்திய இழுவைப் படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியில் கடற்றொழில் ஈடுப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்மையால் தம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பூநகரி, பளை மற்றும் கண்டாவளையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தங்களின் தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பலரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதும் இதுவரை எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த மீனவர்கள், இனியும் பொறுப்பு வாய்ந்தவர்களை நம்பி எரிபொருளுக்காக காத்திருந்தால் தமது குடும்பங்கள் உணவுக்கே வழியில்லாத நிலைமை ஏற்படுமென அங்கலாய்த்தனர்.
எனவேதான், தாம் பண்டைய காலத்து மீன்பிடி முறைமைக்கு மாறியதாகவும் கிளிநொச்சி மீனவர்கள் தெரிவித்தனர்.


17 minute ago
31 minute ago
46 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
46 minute ago
55 minute ago