Freelancer / 2022 மே 11 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையுடன் தொழில்நுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்களை தொடர்ந்து முன்னெடுப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அதனூடாக புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும், கொள்கை மட்டத்திலான கலந்துரையாடல்களை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
“எமது மெய்நிகர் சந்திப்புகள் மே மாதம் 9 முதல் 23 வரை இடம்பெறுவதுடன், தொழில்நுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. திட்டமிட்டதைப் போன்று தொடர்ந்து கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்பதுடன், புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும் கொள்கை மட்டத்திலான கலந்துரையாடல்களை முன்னெடுக்க முழுமையாக தயார் நிலையில் இருக்க முடியும்.” என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் நிதியம் கவனம் செலுத்துவதாகவும், சமூக வன்முறைகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
“சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் பிரகாரம் இலங்கைக்கு உதவிகளை வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்” எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025