R.Maheshwary / 2021 ஜூன் 14 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து ஆயுத குழுவொன்று இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக, அந்நாட்டின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தமிழ்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு பொலிஸாரும் மத்திய புலனாய்வு பிரிவினரும் இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை குறித்த ஆயுத குழு எது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை
குறித்த ஆயுத குழு இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி, தூத்துகுடி,ராமேஸ்வரம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.
9 minute ago
42 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
42 minute ago
6 hours ago