Princiya Dixci / 2021 மார்ச் 08 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகளுக்கும் பாகுபாடுகள் இன்றி அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பட்டதாரிகளால் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
“நாடளாவிய ரீதியில் 3,744 வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகள் காணப்படுகின்றனர். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டு வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் தற்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் புறக்கணிப்பதானது மிகவும் வேதனையாகும்.
“எனவே, பல கஷ்டங்களுக்கு மத்தியில் கற்று பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்ற எமக்கும் பாரபட்சம் இன்றி அரச நியமனங்களை வழங்க வேண்டும்” என இந்தக் கவனயீர்ப்பில் ஈடுப்ட்ட பட்டதாரிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

17 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
48 minute ago