2025 மே 05, திங்கட்கிழமை

பாடகர் தனுஷ்க, நீதிமன்றத்தில் சரண்

George   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாடகர் எம்.ஜீ.தனுஷ்க, நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை(04) சரணடைந்துள்ளார்.

அவர் சரணடைந்த காரணத்தால், அவரை கைதுசெய்யும்படி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீள்       விசார​​ணைக்குட்படுத்த கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, தீர்மானித்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகரான எம்.எஸ்.பெர்னாண்டோவின் பாடல்களை பாடவேண்டாம் என ஏற்கெனவே  தனுஷ்கவுக்கு தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவு தொடர்பான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் அவரை கைதுசெய்யுமாறு நேற்று புதன்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X