Kogilavani / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
32 வழக்குகளில் பிணையில் விடுக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர், பிலிமத்தலாவையில் உள்ள மருந்தகமொன்றை கொள்ளையடிக்கும் போது, கடுகண்ணாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சனிக்கிழமை இரவு ரோந்துச் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை நோக்கிச் செல்கையில், அந்த முச்சக்கரவண்டியின் சாரதி, தப்பியோடிவிட்டார்.
மேற்கொண்ட தேடுதலில், முச்சக்கரவண்டியிலிருந்து, அலவாங்கு, சாவிகள் மூன்று மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அருகிலிருந்த மருந்தகத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டிருந்துள்ளன. இதனை அவதானித்த பொலிஸார், மருந்தகத்துக்குள் நுழைந்து சோதனைக்கு உட்படுத்திபோதே, அந்த மருந்தகத்துக்குள் மறைந்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், அந்த முச்சக்கரவண்டி, கொழும்பு காலி முகத்திடலில் அதேதினத்தன்று திருடப்பட்டதாகவும், தனக்கு எதிராக 32 வழக்குகள் உள்ளதாகவும் அவர், தெரிவித்துள்ளார்.
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago