2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு; குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எப்.எப்.ஜெஸீரா,எம்.என்.எம்.ஹிஜாஸ், மும்தாஜ், ஹிரான் பிரியங்கர )


புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி நாகவில்லு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலாவி நாகவில்லு மீள்குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த முஹமது நஸார் (வயது 33) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் பலியானவராவார்.

சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .