2024 மே 15, புதன்கிழமை

இரட்டைக் கொலை: சந்தேகநபர் கைது

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்வெல-மாலிபொட பகுதியில் நேற்று முன்தினம்(25) இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான தோட்டமொன்றில் ஒழிந்திருந்த போதே சந்தேகநபர் இன்று(27) அதிகாலை 5.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ரங்வெல-மாலிபொட பிரசேத்தைச் சேர்ந்த 27 வயதானவர் என்றும்,இவர் இன்றைய தினம் அவிசாவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரணியகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருந்ததுடன்,மற்றுமொரு ஆணின் சடலமும் குறித்த கொலையுண்ட பெண்ணின் வீட்​டிலிருந்து 60 மீற்றர் தூரத்திலிருந்து மீட்கப்பட்டது.

மேலும் கொலையுண்ட பெண்ணின்  4 மற்றும் 7 வயதான பிள்ளைகள் தாக்குதலுக்கு இலக்காகி அவிசாவலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .