George / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
ஏழாலை வடக்குப் பகுதியில் புதன்கிழமை (05) மாலை குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த சிவஞானரத்தினம் சிவானந்தம் (வயது 39) என்பவரே படுகாயமடைந்தார்.
மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர், மற்றையவரின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்தவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கத்தியால் குத்தியவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
16 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
15 Nov 2025
15 Nov 2025