2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் பலி; மூவர் காயம்

George   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிபிட்டிய, சந்திரிக்காவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர், படுகாயமடைந்த நிலையில் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுதர்ஷன மதுரங்க (வயது 27) என்ற இளைஞனே இந்த மோதலில் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் எவரையும் கைதுசெய்யவில்லை என பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .